Wednesday, October 26, 2011

அங்கும் இங்கும்

S.சிவகுமார்

காஷியரின் கூப்பாடுகளும், இடையில் ப்யூன் காமேஷின் வேலையைத் தவிர்க்கும் தந்திர யுக்திகளும், டோக்கனைப் பெற்றுக் கொண்டு அசாத்தியப் பொறுமையுடன் காத்திருக்கும் சர்வ ஜனக் கூட்டமும், சொல்வதைக் காதில் வாங்காமல் கணினிப் பெட்டியின் மீதே முழுகவனத்தையும் வைத்திருக்கும் கிளார்க் ராமானுஜத்தின் போக்கும் – எங்கள் வங்கிக் கிளையில் அன்றாடம் கடைப்பிடிக்கப்படும் நியதிகள். இது போலவே காலையில் வந்தவுடன் அயராது குறைப்பட்டுக் கொள்ளும் மாடபூசி சீதாராம அய்யங்கார் – “என்ன வேலை செஞ்சு என்ன? ப்ரமோஷன் என்ன ஆறதுன்னே தெரியலியே?இவர் மூத்த மேலாளர். “இந்த நேரத்துக்குள்ளே ஏ ஜி எம் ஆகியிருக்கணும்னா பார்த்துக்குங்கஎன்ற ஒரு ரூபக தாள பல்லவியை பாடித் தவித்து, நம்மையும் தவிக்க வைப்பவர். சில சமயம் வரும் வாடிக்கையாளர்களிடமும், தமது சுய சரிதையை விவரிக்க ஆரம்பித்துவிடுவார். இவர் என்ன பெரிய மகாத்மா காந்தியா?

அன்று ஞாயிற்றுக் கிழமை. வாடிக்கையாளர்கள் 8.30 முதல் 9.30 வரையில் யாரையுமே பெரிதாகக் காணாது. 9.30 க்கு சீரியல் பார்த்துக் கொண்டோ அல்லது வேறு நிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டோ இருப்பவர்கள், ஆஹா நாளைக்கு திங்கட்கிழமை இல்லையோ, பாங்க் லீவாச்சே, பணத்தை எடுத்துடணுமே என்று உடனே புறப்பட்டு வரும் வகைதான் அதிகம். அவ்வளவாக தெருவுக்குத் தெரு ஏடிஎம் கள் இல்லாத காலம். வி ஆர் அட் தெ மெர்சி ஆஃப் தெ பாங்க் என்ற அங்கலாய்ப்புடனேயே வருவார்கள்.

உட்கார்ந்து கொண்டேயிருந்த காரணத்தால் சோம்பல் ஏற்பட சற்றே எழுந்து நின்றேன். வாடிக்கையாளர்கள் மீது சட்டென ஒரு பார்வை. ஒரு பெரியவர், அந்த டிபிகல் வில்லேஜர் என்பார்களே, அந்தத் தோற்றம். நன்றாக நீலம் ஏறிய வெள்ளை உடுப்பு. அடர்த்தியான நரைத்த முடி, மீசையும் சேர்த்துத்தான். உடம்பில் எண்ணைப் பசை. வயலில் செய்யும் உடலுழுழைப்பைத் தவமாகச் செய்து வளர்த்திய உடம்பு. வங்கி திறந்த பொழுதே இவரும் நுழைந்து விட்டார் என்பது என் முடிவு. அப்படியே ஏதோ சிந்தனையுடன் தேமேனென்று உட்கார்ந்திருந்தார். அமைதி காத்தல் நன்றன்று என்பதைச் சற்றும் உணராதவர் போல. வெளியில் சென்று அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தை அடைந்து என்னவென்று கேட்டேன். ஒரு பழைய மடிக்கப்பட்ட பாஸ் புக்கைக் காட்டி, “இதுல காசிருந்தா வேணுமுங்கஎன்றார். எண்ணைக் கூறி அதே ராமானுஜத்திடம் 4150 ரூபாய் உள்ளது என்றறிந்தேன். கணக்கு வி கஜபதி என்ற பெயரில் இருந்தது.

இவ்வளவு ரூபா இருக்குங்க, கணக்கு உங்களுதா? என்றேன்.

கிடைத்த பதில்கணக்கு கொண்டவனோட அப்பா நானு

என் சந்தேகத்தைப் புரிந்து கொண்டவர் போல கைப்பையிலிருந்த ஒரு காகிதத்தைச் சட்டென்று எடுத்து, “இதை வேண்ணா பாருங்கஎன்று என்னிடம் நீட்டினார்.

அது சுடுகாட்டில் அரசாங்கத் தரப்பில் கொடுக்கப்பட்ட எரியூட்டு கட்டண ரசீது. இறந்தவர் பெயர் வி கஜபதி என்றும் அதில் உள்ள நிலையான இருப்பிடம் பாஸ் புக்கில் உள்ளதாகவே இருந்தது. சுடுகாட்டில் பணம் செலுத்தியவர் பெயர் வெங்கடாசலம், உறவு முறை தகப்பனார் என்றும் எழுதப்பட்டு இருந்தது.

“நீங்க.....வெங்கடாசலமா?என்று நான் முடிப்பதற்குள் ரேஷன் கார்ட் நிரூபணம் கொடுக்கப்பட்டது. மற்றபடி எனக்கு அவகாசமே கொடுக்காமல், இவை இரண்டின் ஜெராக்ஸையும் தயாராய் வைத்திருந்தார். அவரை உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே சென்றேன், எந்த உத்தரவாதமும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. ஐந்து நிமிடத்தில் பாங்கின் அலுவல் நேரம் முடிந்தது. நீங்க அங்கேயே உட்காரலாம் என்பதாக பெரியவருக்கும் செய்கை காட்டினேன்.

அவ்தார் சிங் கபூர் (நாங்கள் அழைப்பது கபூர் சாப் என்று) தான் எனக்கு அடுத்த உயர் அதிகாரி. ஊர் அமிர்த்ஸர். ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டு, தமிழின் மீதும் தமிழனின் மீதும் தீராத காதல் கொண்டு இங்கேயே வாழ்பவர். தமிழ் உச்சரிப்பு மிகச் சரியான முறையில் இருக்கும். சில தனியார் தொலைக் காட்சிகளிலும் எஃப்எம் அலைவரிசைகளிலும் தமிழைப் பேசியே கொல்லும் இனத்தவர், இவரிடம் ஓரிரு பாடங்களைக் கற்கலாம்.

சொல்லுங்கோ ஜிஎன்றார்.

விளக்கிச் சொன்னவுடன், “அவரைக் கொஞ்சம் வரச் சொல்லுங்கோ ஜிஎன்றார். வெங்கடாசலத்தை அழைத்து, கபூர் சாபிடம் ஒப்படைத்தேன். “நீங்களும் இங்கேயே இருங்கஎன்று பணித்தார். வெங்கடாசலத்திடம் “ஐயா, ஏதோ வடக்கத்தியான்னு நினக்காதீங்க. தமிழ் சுத்தம்.என்றேன் வெங்கடாசலத்திடம். “உட்காருங்க என்ற கபூர் சாபின் வேண்டுகோளுக்கு, “நான் எப்படிங்க அதிகாரி முன்னாடி……..” என்று நெளிந்து அமர மறுத்து விட்டார்.

என்ன நடந்ததுன்னு சொல்லுங்க இது கபூர் சாப்.

“ஊர்ல கொஞ்சம் நெலம் இருக்கு சாமி. சாமி புண்ணியத்துல நல்ல விளச்சலு. இரண்டு பசங்க எனக்கு. இன்னிக்கு வெள்ளிக் கிழமைல்ல. செவாய்னன்னு மத்தியானம். பெரிய பையன் கஜா, அதான் கஜபதி, அவுங்க அம்மாவண்ட பேசினானாம். மூணாவது வீட்டு சோமசுந்தரத் தேவர் பெண்ணை, கல்பனாவை லவ் பண்றானாம். அவுங்க வீட்லேயும் ஒத்துக்குவாங்க போலத்தானாம். பெரிய இடம்மா அது. நான் வெறுங்கையோட எப்பிடிக் கட்டிக்கிறது. அப்பாக்கோ வயசாச்சு. நிலத்த எம் பேர்ல மாத்தச் சொல்லும்மா. அவுரே பராமரிக்கட்டும். பேரு மட்டும் எனதா இருந்தா போதும். தம்பி பரமேஸுக்கு தான் டிஎன்இபிலே ஜோலியிருக்கே. புழச்சுக்குவான்லே. நான் தான் இந்த டைலர் தொழிலைக் கட்டிக்கிட்டிருகேனே. வரும்படி இல்லாம இல்ல. ஆனா நிரந்தரமில்லையே.என்றிருக்கான்.

உள்ளார சின்னவரு இருந்தது இவனுக்குத் தெரியாது போல. இதையெல்லாம் கேட்டவன் சும்மா இருப்பானா? அது என்னது அது. சரி பங்கு போடச் சொல்லு. டிஎன்இபின்னா எனக்கு கல்யாணம் கார்த்தி வராதா என்ன? பதிலுக்கு அண்ணன்காரனும் பேசியிருக்கிறான். பேச்சு அதன் உச்ச வரம்பைத் தாண்டி விட்டிருக்கிறது. என் பெண்ஜாதி ரத்னம், பக்கத்து வீட்டுப் பையனைக் கூப்டு சைக்கிள்ல என்ன இட்டாறச் சொல்லிடுச்சி. வீட்ல இவனுங்களுகுள்ள பேச்சு மீறி அடிதடி வர்லும் போய்ட்டுதுங்க சாமி. சின்னவன் ஏதோ பாடி பில்டிங்க் எல்லாம் பண்ணி வாட்டசாட்டமா இருப்பான். பலசாலி. போட்டு பெரியவனை நல்லா வுட்டிருக்கான். காதுலேயும் மூக்கிலேயும் ரத்தம். இவ, என் பெண்ஜாதி ரத்தத்தைப் பாத்த ஒடனேயே மூர்ச்சையாய்ட்டா சாமி.

நான் சைக்கிள்ல வந்த பையன் மிதிக்க, வீட்டுக்கு வந்து பாத்தா பெரியவன் செத்துக் கெடக்கான். அரிவாளு கெடக்கு பக்கத்துலே. சின்னவன் எங்கேயோ ஓடிட்ருக்கான். சரிங்க அதெல்லாம் கதைங்க. எனக்கு கொள்ளி போட வேண்டியவன் எனக்கு முன்னாடி கட்டையிலே ஏறிட்டான். அவனுக்கு நிரந்தரமா வழியனுப்பணும்கிறது நான் வாங்கி வந்த வரமாயிட்டுது. அதான் சாமி, இப்பம் செலவெல்லாம் இருக்குது. அவன் கணக்குலெ இருக்கறது கிடைக்குமான்னுதான்....பேசி முடித்தார். அக்கம் பக்கத்தில் சப்தமிருந்தாலும், எங்களது குறுகிய வட்டத்தினுள் அமைதி நிலவியது. அதைக் கலைக்க வேண்டி கபூர் சாப், “பெரியவரே கொஞ்சம் உட்காருங்க.என்றார். என்னிடம் “காஷியர்ட சொல்லிடுங்க, ஒரு பேமண்ட் இருக்குன்னு. சீக்கிரமா ஃபார்மை பூர்த்தி செய்து என்னிடம் கொடுங்கஎன்றார். பாரத்தில் பெரியவருக்குப் பணம் வழங்கலாம் என்ற ஒப்புதலை கபூர் உடனுக்குடன் அளித்துக் கையெழுத்திட்டார். பெரியவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, “உங்களுக்கு சார்ஜ் ஏதும் இல்லையா சார்”.

எங்களுக்கு சம்பளமே நிறைய குடுக்கறாங்க. அது போதும். நீங்க ஒரு வேலை செய்யணும். டெத் சர்டிபிகேட் கிடைத்தவுடன் வங்கிக்கு ஒரு நகல் அனுப்பிடுங்கஎன்று வங்கி முகவரியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு, என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். நானும் என் பிடியை பலப்படுத்தினேன். அன்று அப்பொழுது அவர் என்னைப் பார்த்த பார்வை “ஒங்கப்பன் ரொம்பக் குடுத்து வைத்தவன்என்று கூறாமல் கூறியது.

இயல்பு வாழ்க்கையில் மற்றுமொறு குறுக்கீடு, வெங்கடாசலத்திடமிருந்து ஒரு பத்து நாட்களுக்குப் பின் வந்த கவர்.

இறப்புச் சான்றிதழ் காப்பியுடன், மேலே ஒரு சிறிய காகிதத்தில் “நன்றி, நன்றி. நல்லாருங்கோஎன்று எழுதப்பட்டிருந்தது. மனுஷன் இந்த எழுத்துக்களை எழுதக் கற்று, சிறியதும் பெரியதுமாக எழுதியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது.

கபூர் சாபிடம் கொண்டு காண்பித்தேன். ஜஸ்ட் சிடவுண். அந்த கேஸ்ல நான் எப்படி அவ்வளவு சீக்கிரமா முடிவெடுத்தேன் தெரியுமா? எனக்கும் அதே அனுபவம் தான். என் தம்பி இதே மாதிரி எங்க அப்பாட்ட ஒரு நாள் கேட்டான். அவன் பொண்ணுக்குக் கல்யாணம்னு காரணம் சொன்னான். அண்ட் யூ நோ? என் பெண்ஜாதி சங்கீதா அப்பிடியே குடுத்துடுங்க மாமான்னு என்னைக் கூடக் கேட்காமலேயே சொல்லிட்டாப்பா. அவளுக்கு ஆனா ஒரு ஆசை. அந்த பூமியிலே நல்ல உசத்தி பாஸ்மதி போட்டுருந்தார் எங்கப்பா. நல்லாவே விளையும். வருஷம் ஒருதரம் கொஞ்சம் அனுப்பச் சொல்லுங்க ஜி. என்றாள்.பெண்கள் முடிவெடுக்கும் விதமும் அவர்களின் ஆசைகளும் – ஒரு ஆராய்ச்சிக்கான தலைப்பல்லவா இது?

சீட்டிற்கு வந்தேன். வேலை ஓடுமா? எப்படி ஓடும்! நினப்புதான் ஒடியது. என்ன இதெல்லாம். கபூர் சாபிற்கும் வெங்கடாசலத்திற்கும் என்ன லின்க்? இடையில் என் பாகம் என்ன? எனக்குப் பங்குண்டா? இணைப்புகள் இவை போல் நிறைய என்றென்றும் உளவோ? நமது அவதானிப்புதான் போதவில்லையோ? எல்லை மீறிய யோசிப்போ? இல்லை வழக்கம் போல் எல்லாம் அவன் செயலோ? தம்பி அண்ணனைக் கொன்றது கூடவா?

Tuesday, October 25, 2011

தமிழில் கதை ஒன்று



இதுவும் சரித்திரம் தான்! (அல்லது அகலுதல்)




ஆர்வலன்.




வாழ்க்கையிலிருந்து பாடம் பெற்ற பிறகும் வாழ மறுப்பவர்கள் சிலர் உண்டு. என்னதான் தாங்கள் எடுத்த முடிவை நியாயப்படுத்தினாலும், மீளாத உலகிற்குச் சென்று விட்ட இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் மிச்சமிருக்கின்றன !

குனாலைப் பற்றித்தான் சொல்கிறேன். அலுவலகத்தில் பதித்த பெயர் எஸ் ராமசுப்ரமணியம். “அது என்னப்பா குனால்?”. முதலில் சிரித்து விட்டு பின் பதிலைச் சொன்னான். “பக்கத்து வீட்ல ஒரு சேட் இருந்தார். அவர் பேர் குனால். நான் மட்டும் சின்ன வயசுலேந்தே இந்தக் “குனால்” வார்த்தையை குலான் என்றே உச்சரித்துக் கொண்டிருந்தேன். ரொம்ப நாள் அது மாறவேயில்லை. அதனாலே அதுவே என்னைக் கூப்பிடுற பெயரா இருந்துடுத்து.”

கம்பெனியில் வேலை எல்லாம் சுத்தம். பல முறை ஜி எம் பத்மநாபன் குனாலின் கை எழுத்தைப் பாராட்டியிருக்கிறார். “போத் ஆர்டிஸ்டிக் அண்ட் ரீடபள்” என்று ஒரு முறை புகழ்ந்திருக்கிறார். இதன் காரணமாகவே கம்பெனிக்காக சின்னச் சின்ன போஸ்டர் எழுத குனால்தான். ஆங்கிலமும் சரி, தமிழும் சரி எல்லா எழுத்துக்களும் சரியான அளவையில் இருக்கும். காரியத்தில் கண்ணாக இருப்பான். குறுக்கே பேசிவிடக் கூடாது. இடது கையில் சிகரெட். “இதை ஏம்பா நிறுத்தலை” என்றால், முடியலியேப்பா என்பான்.

ஒரு நாள் - சார் ஒரு சின்ன ஹெல்ப் என்றான். கையில் ஏதோ ஒரு சிட் கம்பெனியின் விண்ணப்பம். கடன் தொகை ரூ 25000. என்னிடம் உத்திரவாதம் - ஷுரிடி, கேட்டான். “எதுக்குப்பா இது”, என்றதும் ஒரு முழு கதையைச் சொன்னான். வீடு கட்டும் பொழுது எஸ்டிமேட் கொஞ்சம் மீறி விட்டதாம். மனைவியின் நகைகளை வைத்து சரிக்கட்ட வேண்டியிருந்ததாம். “புவனா, பாவம் சார். நகை இல்லாமல் எந்த ஒரு விசேஷத்திற்கும் ஆஜராக யோசனை பண்ணறாள்.”. ஆம் இப்பொழுதெல்லாம் புன்னகையைவிட தங்க நகைகளில் தான் மக்கள் முதலீடு செய்கிறார்கள். அக்ஷய த்ரிதியை என்ற மீடியா கூத்து வருடா வருடம் நடக்கிறதே. அன்று ஒரு குந்துமணியாவது அந்த மஞ்சள் உலோகத்தை வாங்கிடணுமாம். புதிய மரபை உருவாக்கி நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நிற்க, குனாலிடம், கையெழுத்திடுவதற்கு முன் ஒரு வார்த்தை சொன்னேன் “பார்த்துப்பா, கடன் என்பது ஒரு வலை. மாட்டிக்காதே”.

இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி கடனைப் பெருக்கியுள்ளான். இந்த ஆட்டைத் தூக்கி மாட்டிலே போட்டு என்பார்களே. அது போலத்தான். ஒரு கடனை அடைக்க மற்றொன்று, அதைத் துரத்தியடிக்க இன்னொன்று. அவனை யார் காவல் காக்க முடியும். அவன் போக்கிலே எல்லாம் போய்க் கொண்டிருந்தது. கடன் அவனைப் பிடித்த சனியாகி விட்டது என்பதை ஒரு போன் கால் நிரூபணமாக்கியது. யார் என்று கேட்டுடுங்க சார் என்றான். பாரதியாரே ஆபத் தர்மத்திற்காக ஓரிரு பொய் சொல்ல அனுமதி தந்திருப்பதை மனதில் கொண்டு “ குனால் ஹாஸ் கான் அவுட் ஆன் எ ஜாப், வாட் இஸ் தெ மேட்டர் ?” என்றேன். எதிர் முனையிலிருந்து வந்த பதில் எனக்கு சில அதிர்ச்சி தரும் உண்மைகளை கண் முன்னே கொண்டுவந்தது. அவன் இந்த பிரதாப் சிட் ஃபண்டில் பெற்ற கடனுக்கு தவணையாகக் கொடுத்த செக் ரிடர்ன் ஆகிவிட்டதாம். குனால் தெரிந்தவராதலால், முதலில் அவனிடம் பேசி விட்டு, அதைப் பொறுத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளார்களாம். குனாலை முறைத்தேன். ஒரு வார்த்தை கூட வெளியில் வராமல் எங்கள் இருவரிடத்திலும் விஷய பரிமாற்றம் நடந்தது. சாயங்காலம் “இரண்டு நாள் லீவு வேணும் சார்” என்றான். உரிமையுடன் “விஷயம் என்னவோ?” என்றேன். வந்து சொல்றேன். ப்ளீஸ் - என்று நழுவி விட்டான்.

மூன்றவது நாள். வண்டியை அலுவலகத்தில் நிறுத்தும் போதே ஜி எம், “இங்கே வாங்க” என்று சைட் கண்ணாடி மூலம் கூப்பிட்டார். “ந்யூஸ் தெரியுமா? உங்களுக்கு. கொஞ்சம் க்ளோஸ் ஆச்சே?” என்ற அறிவிப்புடன் அவர் கொடுத்த செய்தி..........“தலை சுத்தறது, சார்”, என்று என்னைத் தடுமாற வைத்தது. நாற்காலியின் கைப்பிடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். இப்பொழுது நினைத்தாலும் உடலில் ரத்தமே ஓடாதது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. “என்ன, கொஞ்சம் துக்கமும் கொஞ்சம் ஆத்திரமும் வர்றதோ?”. மனுஷன் அனுபவ சைகாலஜி நன்றாய் படித்திருக்கிறார். “ ந்யூஸ் இப்படியிருப்பதால், எல்லாரும் வீட்டிற்கெல்லாம் போகவேண்டாம்” என்று ஒரு எச்சரிக்கை கொடியையும் ஏற்றி வைத்தார். நானும் சுற்றறிக்கையில் செய்தியைக் கொடுத்தேன். நோட்டீஸ் போர்ட் வேண்டாம் என்று ஸ்டாஃப் புனிதனிடம் செய்கை காட்டி, “எல்லார்டையும் காட்டிடுங்க தம்பி” என்றேன். அதை எழுதும் பொழுது கையில் நகம் ஆரம்பிக்கு இடம் வரையில் வியர்த்திருந்தது.

எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர். எல்லாம் ஜாடை மாடையாகத் தெரிந்து வைத்திருந்தனர் போலும். அவர்கள் என்னைக் கேட்ட கேள்விகள் “என்ன சார்.......ஏன் சார் இப்படி.......” என்பவையே. சிலர் என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். லேடி ஸ்டாஃப் எல்லாம் என் அருகில் வந்து ஏதோ ஜபம் செய்வது போல் நின்று விட்டு இருக்கைக்குச் சென்றனர். அலுவலகம் என்பதால் அனைவருமே தங்களை அடக்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் சிறிய அளவில் சாயங்காலம் ஒரு இரங்கல் கூட்டம். என்னால் பேச முடியாது என்று தவிர்த்து விட்டேன். இரண்டு காரணங்கள் - நிச்சயம் உணர்ச்சி வசப்பட நேரிடும். “சார் இவ்வளவு எமோஷனல் என்று தெரியாதே” என்று எல்லோரும் எனக்கு ஒரு பட்டத்தைக் கட்டி விடுவார்கள். இதை விட முக்கியம். ஒரு குற்ற உணர்ச்சி. கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தும் கறாராக ஒன்றும் செய்யாமல் போனது. கூப்பிட்டுப் பேசியிருக்கலாம். தேவை என்றால் ஓங்கி ஒரு அறை கூட விட்டிருக்கலாம். அலுவலகத்தில் ஏற்படும் உறவுகள், ஒரு நெருக்கம், ஒரு சூழல், ஒரு இதம் - எல்லாம் அங்கே வேலை செய்பவர்களுக்கு நன்றாய் விளங்கும்.

நாட்கள்....... அதற்கென்ன.......நகர்ந்தது, - ஓடவும் செய்தது. அவன் சீட் வேலையும் பகிர்ந்து கொடுக்கப் பட்டது. தலைமை அலுவலகமும் இரண்டொரு மாதங்களில் வேறு ஆள் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஜி எம் உருக்கமான ஒரு கடிதம் எழுதினார். அனைவரும் படித்தனர். நாங்களும் குனால் இல்லாமல் வாழக் கற்றுக் கொண்டோம். போலீசும் ரொம்ப தொந்தரவு கொடுக்கவில்லை. இரண்டு முறை வந்திருந்தனர். அவ்வளவுதான்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள்.காசாளர் கோமதியிடம் பணம் பெறச் சென்றேன். பணத்தைக் கொடுத்துக் கொண்டே “ இந்த அளவிற்குப் போகும் என்று யார் சார் எதிர்பார்த்தார்கள்?” என்றார்கள். குனாலைப் பற்றித்தான் பேச்சு. “ஆமா. படுபாவி. அவனவன் பொதுப் பணத்தை வாங்கி ஃபைனான்ஸ் கம்பெனி என்று ஆரம்பித்து நிறையச் சேர்ந்தவுடன் தலை மறைவாகிறார்கள். இவனைப் பாருங்க? என்ன அப்படி மீள முடியாத கண்டிஷன்? தற்கொலை முயற்சி என்றும், கடைசியில் காப்பாற்றப் பட்டதும் கேள்விப் பட்டிருக்கிறேன். இது என்ன நம் கண் முன்னே? எனக்கு மனசு உறுத்தரதும்மா? குறுக்கே பாய்ந்து ஏதும் செய்யத் தவறி விட்டேனோ? கவிஞர் புவியரசு கூறிய தற்காலத்து காந்தி குரங்குகள் போல எதையும் பார்க்காமல், எதையும் கேளாமல், எதையும் பேசாமல் இருந்து விட்டாய் என்று என் மனசாட்சி எனக்கு சாட்டையடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவனை நினைத்து நினைத்து நான் வெசனப் பட்டாலும், அவனை என்னால் மன்னிக்க முடியவில்லை. என்னையும்தான்”

“மேடம் ஒரு பேமென்ட் வச்சிருக்கேன்”” என்ற புனிதனின் குரல் நிகழ் காலத்தில் நாம் இருப்பதை உணர்வித்தது.

Saturday, October 1, 2011

Gandhi's Strange Experiments

Gandhi’s Experiments with the Auto @ Chennai

Mahathma Gandhi had made up his mind. He wanted an authentic auto ride in Chennai to gain first person experience and then suggest some dharmic solutions. Remember, he went round India before drawing the destiny of this nation. He had to “travel in the sly”, lest he should be identified - or much worse - dubbed a madcap, that is in case he revisited his Bharath like a “half-naked fakir”. A simple make-up transformed him and he decided to sport cotton pants (found the cost appalling, nevertheless). A khadi shirt in immaculate white completed his attire. (even white, is adulterated with blue is it?) With all this he stopped an empty auto.

Courtesy was at its worst as this busybody of a driver chose to respond from the centre of the road with the words were “Enge?” (Where to?)

and to this, our revisitor said “Mylapore”.

“Mylaporela Enge” (Where in Mylapore?) he questioned further

and Gandhi uttered “Kulam”.

The automan quoted an arbitrary two hundred and Gandhi adjusted his spectacles - really a shock-absorbing act.

What about the meter? Gandhi venutred to ask. This fetched the retort “Ishtam irunda eru, sir ?” (Get in only if you wish to?)

And Gandhi let him go. Sarve Janao Sukhino Bhavanthu! What next?

There must have been another guy watching all this. He came alarmingly close to Gandhi and smiled.

“Utkarungo Polam” (Let us go!). But what portion of my purse will I have to empty?

“Neengale kudungo” (you decide what to give). Oh! I need not go back to heaven.

Then the driving. What on earth is this? Free-wheeling? No norms. Signals bypassed when still some 20 seconds remain. Well! I had conceived of non-violence but here after so many years it is only the violent mind that is preponderant.

And quickly “Kulam” was cited and reached. Now the fare. This auto fellow says “Ishtappattadhu kudungo?” (Anything) and Gandhi stretched out a hundred rupee note and got back nothing. Half of what the previous bloke had quoted!

Let us talk, he thought. Why the meters do not run? Why auto drivers are unruly? Why is there a wilful overloading bordering on the precarious? Why police look but do not see?

And for all this this autodriver laughed heartily. First you visit other states.

How are the bus services there? (i.e. counter-question number one). How dependent are they on autos for commuting? (counter-question number two and more of such….) How effective are the police over there? How morally satisfying is the licensing procedure? Are there pitfalls in the FC (renewal) harangue? Now Now….

For Gandhi this was more than a handful and his inner voice took over. Now the neighbouring states have to be visited. And the leave he had taken from the other world could not be extended. If he violated the leave rules it would become a case of “My Experiments with Untruth”. So I’ll go back, visit the other states and then formulate something. Any interim report, sir? Oh! Yes! What on earth would he have written The matter, dear blokes, is now pending in the court of truth and hence - subjudice.

Friday, September 23, 2011

MAS

For Carnatic enthusiasts - A close friend of ours Sri M A Subramaniam passed away recently. He had maintained a log of songs he had listened to, all carnatic music, in the form of a diary that was familiar with a group of listeners at concerts.

My tribute to him:

M A Subramaniam, a k a MAS, was in the first place dear to everyone. He seemed to be a completely organized man - old age and disabilities notwithstanding. He was also known as potti sir as he always carried with him a briefcase, with all its contents well arranged on the inside. Yes. I have had a chance to give it a glance.

Concert-going was a must for him and he never was a music season specialist. Listening therefore was a way of life for him, a habit. And as far as I know he had no favorites. All concerts occupied his mind. One still remembers his comments about Unnikrishnan – "Poor fellow! He has to straddle both worlds, the cinema and the classical, a difficult task". If any singer sang an old song of some unpopular composer, MAS would touch cloud nine. An entry would be already found of this song in his self-made volume that had an eminently browsable list of songs. That shows a veteran listener. And what beat me all ends up was the way he patterned himself. One is given to understand that he retired as an ITO, and how I wish I had worked under him. Next life! Perhaps!

He had a small torch to guide him in making his entries in his song-index book. This book would often be found in circulation among a small group of rasikas for them to ascertain the authorship and raga of a particular song. The inquisitive human mind would perforce look to the previous pages and would thus enhance its knowledge. MAS did his indirect service - truly memorable - by making people look at those previous pages.

His constant question to me in concerts was whether my wife had come. And the question would be "Madam Vandhirukkangala?". And of late he could identify people by their single utterance or even by their very presence, feel! He distributed strong peppermint or chocolates to his fellow rasikas.

I feel proud about two things. I was instrumental, being a contributor to "The Hindu", in arranging for a small write-up to appear in the magazine (done by V Balasubramaniam (Bala)) and fate blessed me in another way too. It was with my garland that MAS undertook his journey to the cremation ground. I was nearer to him more than anyone else and was there for a longer period with him, more than anyone else. Bodily it was all over..............Still my offering was with him.................

My heartiest condolences to all his family members and to Akhil, who took abundant care of him.

I also observed that two of his grand-daughters (am I right) refused to part with him. They came right up to the hearse (vehicle) that took him away from us and wept - no words would describe their sorrow – profusely, knowing that MAS is finally no more, physically. My heart goes out to these two especially.

s.sivakumar

Monday, September 19, 2011

Got into this world

Yes! Me too!

Will it last! It should!

Hope to present some interesting stuff eh!

More will come!

aarvalan.